பாரதம் குறித்து ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்), வரும் 2028 அல்லது 2029 வரை பாரதம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதா நாடாக மாற முடியாது என்று இந்த ஆண்டு ஏப்ரலில் கணித்திருந்தது. தற்போது ஐ.எம்.எப் அதன் கணிப்பை மாற்றிக்கொண்டுள்ளது. அதன் புதிய சமீபத்திய திருத்தத்தின்படி, 2026 அல்லது 2027க்குள் பாரதம் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற அதன் இலக்கை எட்டும் என தெரிவித்துள்ளது.  அதாவது அவர்கள் ஆரம்பத்தில் கணித்ததை விட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே. பாரதம் 5.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று ஐ.எம்.எப்பின் புதிய கணிப்பு கூறுகிறது.  மேலும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வங்கதேசம் பாரதத்தை முந்தியுள்ளது என்ற தனது சர்ச்சைக்குரிய கூற்றையும் ஐ.எம்.எப் திருத்திக்கொண்டுள்ளது.