சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள்

பாரதத்தின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில், கொரோனா இரண்டாம் அலையை தடுக்க, கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. குஜராத் உயர்நீதிமன்றம் ஊரடங்கு விதிக்கப்பட வேண்டும் என்று சமீபத்தில் பரிந்துரைத்தது. மகாராஷ்டிர அரசும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே மற்றொரு ஊரடங்கு வந்துவிடுமோ என பயந்து பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.