ஹிந்து முன்னணியினர் கைது

முஸ்லிம் கிறிஸ்தவர்களின் திருவிழாக்களை கொரோனாவைக் காரணம் காட்டி தடுக்காத தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, அவற்றை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறது. ஆனால், சங்கரன்கோவில் ஆடித்தபசு விழாவிற்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறது. எனவே, இதனை எத்ரிக்கும்விதமாக, கோயில் நுழைவு போராட்டம் அறிவித்தது இந்து முன்னணி. நேற்று நடைபெற்ற கோவில் நுழைவு போராட்டத்தை‌ தடுத்து நிறுத்தியது தமிழக அரசின் காவல்துறை. தடையை மீறிச் சென்ற மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் உட்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.