இந்து முன்னணி ஆர்பாட்டம்

கனல் கண்ணனை கைது செய்ததை கண்டித்து மாநிலம் தழுவிய இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தின்போது, பல இடங்களில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். “தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி ஆட்சி நடக்கிறதா? ஆர்ப்பாட்டத்தை தடை செய்தும், இந்து முன்னணியினரை கைது செய்தும் கருத்துரிமையை நசுக்கி சர்வாதிகார நடவடிக்கையால் உண்மையை மறைக்கலாம் என்று தமிழக அரசு நினைத்தால் ஹிந்துக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்” என இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.