இந்து முன்னணி ஆர்பாட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஹிந்து மாணவி திருநீரு அணிந்து பள்ளி செல்வதை தடுத்த ஆசிரியரையும், இதை தட்டி கேட்ட மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டிய  தலைமை ஆசிரியரையும் கண்டித்தும், இதுகுறித்து சுரண்டை காவல் நிலையத்தில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்தும் இந்து முன்னணியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் மகா மாரியம்மன் கோயிலின் எதிரில் சப்த கன்னிகள் திருமேனி பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். கடந்த 4ம் தேதி சமூக விரோதிகள் இந்த சுவாமி சிலையை உடைத்துள்ளனர். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தாமல், மாடு முட்டியதாக தவறான தகவல் கொடுத்த காவல்துறை தனிப்பிரிவு காவலரை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கடவுளிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.