சிறார்களுக்கு கோவாக்சின் மட்டுமே

பதினைந்து முதல் 18 வயதுடையவர்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிக்கு கோவாக்சின் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு சுகாதாரப் பணியாளர்களை பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. தேவையான கூடுதல் அளவு ‘கோவாக்சின்’ அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுதான் தற்போது சிறார்களுக்கு அனுமதிக்கப்பட்ட பாரதத்தில் உள்ள ஒரே அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியாகும்.