லயோலாவில் ஹிஜாப் சர்ச்சை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் லயோலா கல்லூரி ஒன்று உள்ளது. இக்கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புகளுக்கு செல்ல இன்று அனுமதி மறுக்கப்பட்டது. ஹிஜாபை அகற்றி விட்டு வந்தால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக கூறியது. இதனால் மாணவிகள் கல்லூரி எதிரில் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு வந்த மற்ற முஸ்லிம்களும் கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ஆந்திராவில் மாணவ மாணவிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.