பிரதமருக்கு உயரிய விருது

பூடான் நாட்டின் தேசிய தினமான நேற்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடானின் உயரிய விருதான ‘நகடக் பெல் ஜி கோர்லோ’ விருது வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பூடானின் தேசிய தினத்தை முன்னிட்டு தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் லோடே ஷேரிங், தனது முகநூல் பதிவில், ‘பிரதமர் மோடி இந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர். பூடான் மக்களிடமிருந்து வாழ்த்துக்கள். அனைத்து தொடர்புகளிலும் உன்னதமான, ஆன்மிக மனிதனாக மோடி பார்க்கப்படுகிறார். இந்த கௌரவத்தை நேரில் கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம். மிக உயரிய சிவிலியன் விருதான நகடக் பெல் ஜி கோர்லோவுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிக்கும்போது நான் மகிழ்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாக பாரதத்தின் ஆதரவு பூடானுக்கு உள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுகளின்போது மோடியின் நிபந்தனையற்ற நட்பும், ஆதரவும் பூட்டானுக்கு நீடிக்கிறது’ என தெரிவித்து உள்ளார்.