ரயிலில் கனரக கருவிகள்

இறக்குமதி செய்யப்பட்ட 58 கனரக தோண்டும் கருவிகள் மற்றும் உபகரணங்களை சென்னை துறைமுகத்தில் இருந்து வாலாஜாபாத் வரை ரயில் மூலம் அனுப்பி சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் சாதனை படைத்துள்ளது. இத்தகைய இயந்திரங்களை சாலை வழியாக அனுப்புவதுதான் வழக்கம். ஷாங்காயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் முதல் முறையாக ரயில் வழியாக வாலாஜாபாத்துக்கு அனுப்பப்பட்டன. வாலாஜாபாத்தில் இருந்து செய்யாறு வரை சாலை மார்க்கமாக இவை எடுத்து செல்லப்படும். இந்த புதிய முயற்சி சாலை நெரிசலை கணிசமாகக் குறைக்கும்.