சுகாதார ஊழியர் காப்பீடு

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ‛கொரோனாவுக்கு எதிரான பணியில், சுகாதாரத்துறை ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். ஏழைகளுக்கு இலவசமாக உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன். கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை, மேலும் ஆறு மாத காலம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு பலியான சுகாதாரத்துறை ஊழியர்களின் குடும்பத்துக்கு காப்பீடு தொகையை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.