சூலம் மாறியதா?

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் கீழ் செயல்படும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், கடந்த 2012ல் கோயிலில் பணிபுரியும் சிலர், வெளி ஆட்களுடன் இணைந்து காளியம்மன் கையில் உள்ள ஐம்பொன்னால் ஆன சூலத்தை திருடிவிட்டு, அதே அளவுடைய வேறு சூலம் செய்து வைத்தனர். தற்போது உள்ள சூலத்தையும், முன்பிருந்த சூலத்தின் படத்தையும் வைத்து பார்த்தாலே உண்மை தெரிந்துவிடும். இதில், கோயிலில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளது தெரிந்தும் அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அதிகாரிகள் யாரை பாதுகாக்கின்றனர் என்று தெரியவில்லை என கோயிலில் பணிபுரிபவர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.