ஹரிகர் ஆகும் அலிகர்

உத்தரபிரதேச மாவட்டம் அலிகரில் நடந்த பஞ்சாயத்து வாரியக் கூட்டத்தில், அலிகர் என்ற பெயரை ஹரிகர் என மாற்றுவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏகமானதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், தானிபூர் விமானதளத்தை கல்யாண் சிங் விமானத்தளம் எனப் பெயர் மாற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019ல் யோகி ஆதித்யநாத், மாநிலத்தில் தேவையான நகரங்கள், முக்கிய இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று கூறினார். அதன்படி, 2019 ஜனவரியில் கும்பமேளா நடப்பதற்கு முன்னதாக அலகாபாத் என்பது பிரயாக்ராஜ் என்று பெயர் மாற்றப்பட்டது. முகல் சராய் பகுதி பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் நகர் என்று பெயர் மாற்றப்பட்டது, பைஸாபாத்தை அயோத்யா என மாறியுள்ளது. அவ்வகையில், தற்போது அலிகர் பெயர் ஹரிகர் என மாற்ற பஞ்சாயத்து சார்பில் மாநில அரசிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.