நல்ல கோலம்

ஆசாதிகா அமிர்த மகோத்சவ் என்ற பெயரில் பாரதத்தின் 75வது சுதந்திர வருட கொண்டாட்டங்கள் 75 வாரங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக மத்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஒன்றாக நமது தமிழகப் பெண்கள் பங்கு பெற்று மிகச்சுலபமாக ஜெயிக்கக்கூடிய வகையில் ஒரு கோலப் போட்டியும் நடைபெறுகிறது. இப்போட்டியில் நாட்டிலேயே முதலாவதாக வருபவருக்கு ரூ. 6 லட்சமும், ஒவ்வொரு மாநிலத்திலும் முதலாவதாக வருபவருக்கு ஒரு லட்சமும், மாவட்ட அளவில் முதலாவதாக வருபவருக்கு பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும், தேசத்தின் மிக முக்கியத் தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, பிரதமரின் ‘மனத்தின் குரல்’ உரையில் ஜெயித்தவர்களைப் பற்றி குறிப்பிடப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இந்த நல்ல வாய்ப்பை நாம் நழுவ விடலாமா? இதில் பங்குக்கொள்ள வரும் 14ம் தேதிக்குள் https://amritmahotsav.nic.in/rangoli-making-competition-registration.htm என்ர இணைய முகவரியில் பதிவுசெய்ய வேண்டும்.