கோ ரதம் கோசாலை துவக்க விழா

தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயம், பசுப் பாதுகாப்பு, அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் போன்ற பல்வேறு நமது மண், மரபு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் தென்தமிழகம் சார்பாக, கோ ரதம் மற்றும் இயற்கை விவசாய  விழிப்புணர்வு பிரச்சார யாத்திரை இன்று முதல் திருச்சியில் இருந்து துவங்க உள்ளது. வி.ஹெச்.பி அமைப்பின் அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் பராண்டே மற்றும் வி.ஹெச்.பி தென் தமிழக அமைப்பாளர் பி.எம் நாகராஜன் ஆகியோர் இந்த ரதத்தை கொடியசைத்து துவக்கி வைக்கின்றனர். மேலும் பல்வேறு முக்கிய பொறுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்கின்றனர். இதைத் தவிர திருச்சியில் இன்று வி.ஹெச்.பி’யின் ‘பாரதிய கோ சேவா சமிதி’யின் சார்பில் புதிய கோசாலை திறப்பு விழாவும் இனிதே துவங்க உள்ளது.