லட்சத்தீவில் காந்தி சிலை

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் தேசம் முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் கவரட்டி தீவில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் சிலையை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பாரத சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு லட்சத்தீவில் இதுவரை சிலைகள் ஏதும் அமைக்கப்படவில்லை என்பதும் காந்தியின் சிலைதான் முதல் சிலை என்பதும் குறிப்பிடத்தக்கது.