இணைவோம் அணிலாக

பெரம்பலூரரில்  ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு நிகழ்ச்சியில் தனலட்சுமி கல்லூரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர்  சிவசுப்பிரமணியம் ஆகியோர் ராமர் கோயில் நிர்மாணப் பணிக்கு நிதி வழங்கினர்.

அசாம், வெஜபாடா கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான முகுட், ஸ்ரீராம ஜென்ம பூமி ஆலய நிர்மாணப்பணிக்கு ரூ. 2000 நிதி சமர்ப்பணம் செய்துள்ளார். இவரது உடல் பாதிப்பினால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில், ஊரில் பிறரிடம் கையேந்தி வழ்க்கை நடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கோயில் கட்ட பறையடித்து செய்தி சொல்லி நிதி வசூலிக்கும் ராம தொண்டர்.