பாதிரி உட்பட நால்வர் கைது

சட்டீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களை மதமாற்றம் செய்ய முயன்ற கிறிஸ்தவ பாதிரி அருண் குஜூர் மற்றும் அவருடைய மதபோதகர்கள் பசந்த் லக்ரா, சால்மன் டிக்கா மற்றும் டினோ குஜூர் ஆகியோர் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். நான்கு பழங்குடியினரை கிறிஸ்தவர்களாக மாற்ற முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. படிக்காத பழங்குடி மக்களை இப்படி இவர்கள் தொடர்ச்சியாக மதமாற்றம் செய்து வருகின்றனர் என பழங்குடி மக்கள் குழு காவல்துறையில் புகார் அளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 295(A)’ன் கீழ், ஒருவரை கட்டாயமாக பிற மதத்திற்கு மாற்றும் முயற்சிகள் அவருடைய தனிப்பட்ட நலன்களை பாதிக்கும் வகையில் அமைந்தால் புகார் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.