வெளியுறவுத்துறை கண்டனம்

ஹிஜாப் சர்ச்சை குறித்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்கு பாரதம் பதிலடி கொடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துக்கள் மக்களை தவறாக வழி நடத்துபவை என்று தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பக்ஷி, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் இது பாரதத்தின் உள்நாட்டு விவகாரம். இதில் வெளிநாடுகள் தலையீடு தேவையற்றது. பாரதத்தின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்குள்ளேயே இதை தீர்த்துக்கொள்ள முடியும். இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இதுபோன்ற கருத்து வெளியிட்டதன் மூலம் தனது மதிப்பை தானே குறைத்துகொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.