தவறான முன்னுதாரணம்

சமீபத்தில் கொரோனா காலத்தில் தடையை மீறி நடமாடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துள்ளார். இது பலருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால், அதே சமயத்தில் தேசநலனுக்கு எதிராக திட்டமிட்டே நடத்தப்பட்ட, சி.ஏ.ஏ போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளையும் முதலமைச்சர் ரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்காக ஒரு தவறான முன்னுதாரணத்தை முதல்வர் முன்னெடுக்கிறாரோ என பொதுமக்கள் கருதுகின்றனர்.