போலி பல்கலைக் கழகங்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், ‘யு.ஜி.சி’யின் அனுமதி பெறாமல் 24 பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இரண்டு பல்கலைக் கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உத்தர பிரதேசத்தில் எட்டு, டெல்லியில் ஏழு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.