போதை மருந்து கும்பல் கைது

போதை மருந்து, ஹவாலா குறித்த தகவலின் பேரில், பஞ்சாப்பின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மாவட்டங்களில்,  மன்பிரீத் சிங்,  தேஜா குர்த், ரஞ்சித் சிங் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி தேடுதல் சோதனையை நடத்தியது. அதில்,  போதைப்பொருட்கள் விற்பனையால் பெறப்பட்ட ரூ. 20 லட்சம், 9 மிமீ 130 தோட்டாக்கள், அலைபேசிகள், பென் டிரைவ், ஹெராயினை பொதி செய்ய பயன்படுத்தப்படும்  பாலிதீன் பைகள், ஒரு ஹூண்டாய் வெர்னா கார், ஒரு இரு சக்கர வாகனம், சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் காலிஸ்தான், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும், ஹவாலா, போதை மருந்து கடத்தல், சட்ட விரோத ஆயுத விற்பனை  போன்றவற்றில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.