போதை பொருட்கள் பிடிபட்டது

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ், ராஜதால் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லை வேலிப்பகுதியின் அருகே இரவில் வயலில் சந்தேகத்திற்கு இடமான சத்தம் வந்ததை அடுத்து அங்கு சோதனை நடத்திய நமது எல்லை பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானின் மணியானா கிராமத்தை சேர்ந்த கடத்தல்காரன் காசி அலியை கைது செய்தனர். அவனிடம் இருந்து 6.3 கிலோ ஹெராயின் போதைப் பொருள் அடங்கிய பை கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபகாலமாக போதைப்பொருட்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு வருகின்றன.  குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பாகிஸ்தான், ஈரான், ஆப்கன் நாட்டவர்களுக்கு தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாட்டுக் குழுவினர் கடந்த  ஜனவரியில் ரூ. 1,000 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர்.  நவாஸ், முகமது அஃப்னாஸ் ஆகிய இரண்டு இலங்கை முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் ஒரு சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் விருந்தின்போது கைது செய்யப்பட்டார்.