ராகுல் முன்னால் நிற்க வேண்டாம்

கேரளா, இடுக்கியின் முன்னாள் எம்.பி.யும் எல்.டி.எப் தலைவருமான ஜாய்ஸ் ஜார்ஜ், உதம்பஞ்சோலாவில் எல்.டி.எப் வேட்பாளர் எம்.எம்.மணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல், சமீபகாலமாக பிரச்சாரத்திற்கு செல்லும்போது ஆங்காங்கு உள்ள பெண்கள் கல்லூரிகளுக்கு அடிக்கடி சென்று அவர்களுடன் கண்ணியமற்ற வகையில் நாட்டியமாடுவதை விமர்சிக்கும் விதத்தில், ‘ராகுல் எப்போதும் பெண்கள் கல்லூரிகளுக்கு மட்டுமே செல்வார். அவர் அங்கு சென்று பெண் பிள்ளைகளை வளைக்கக் கற்றுக்கொடுப்பார். என் அன்புப் பிள்ளைகளே, தயவுசெய்து அவருக்கு முன்னால் நிற்க வேண்டாம். அவர் ஒரு திருமணமாகாத பிரச்சனையாளர். ராகுல் காந்தியிடம் பெண்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என கூறி கிண்டலடித்தார்.