திமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு

அரிய வகை கடல் அட்டை, கடல் குதிரை போன்ற கடல்வாழ் உயிரினங்களை வெளிநாட்டிற்குக் கடத்திய வழக்கில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தை சேர்ந்த வில்லாயுதம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தி.மு.கவின் மீனவர் அணி செயலாளராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள அவருடைய வீடு, தங்கும் விடுதி, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினர். இரவுவரை நீடித்த சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.