ஆக்கிரமிப்பு இடத்தில் தி.மு.க அலுவலகம்

மதுரை பழங்காநத்தம் பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் தி.மு.க தொழிற்சங்கத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அங்கு தி,.மு.கவின் தொழிற்சங்கத்திற்காக மாடியுடன் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு நிர்வாகமும் அனுமதி அளிக்கவில்லை. மாநகராட்சி அனுமதியும் பெறப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கக் கேட்டு மாநகராட்சி மூன்று முறை ‘நோட்டீஸ்’ அனுப்பியது. எனினும் எதையும் கண்டுகொள்ளாமல் கட்டுமானப் பணிகளை தி.மு.க தொழிற்சங்கம் தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து இறுதி எச்சரிக்கையாக நான்காவது நோட்டீஸ’ அனுப்பப்பட்டு உள்ளது. அனுப்பப்பட்ட நோட்டீஸ்களுக்கு நிர்வாகம் சார்பில் ‘எந்த கட்டடமும் எங்களால் கட்டவில்லை. நடைபெறும் கட்டுமானத்திற்கும் நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை’ என பதில் அளித்துள்ளது. இதனால், கட்டுமானப் பணி மேலும் தொடர்ந்தால் அந்த இடத்திற்கு ‘சீல்’ வைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.