காவலர்களை தாக்கிய தி.மு.கவினர்

ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா’வின் கணவர் கணேஷ் தி.மு.கவில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். இவர் மீது திருட்டு வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் இருவரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது அங்கு வந்த கோவை தனிப்படை காவலர்கள் கணேஷை கைது செய்து காரில் ஏற்றினர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், காரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். சட்டவிரோதமாக கணேஷை அழைத்து சென்று அவரின் கைவிலங்கை வெல்டிங் செய்து உடைத்தனர். கணேஷின் ஆதரவாளர்கள் தாக்கியதில், 2 காவலர்கள் காயமடைந்தனர். தப்பியோடிய கணேஷை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கைவிலங்கை உடைத்த வெல்டிங் கடை உரிமையாளரை கைது செய்யப்பட்டார். குற்றவாளியை கைது செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.