காவலர்களை மிரட்டும் தி.மு.கவினர்

சென்னை ராயபுரத்தில் மாநகராட்சி 51வது வார்டு கவுன்சிலர் நிரஞ்சனா என்பவரின் கணவர் ஜெகதீசன் வழக்கறிஞராகவும், உதயநிதி ரசிகர் மன்ற உறுப்பினராகவும் உள்ளார். நேற்று முன்தினம் இரவில் இவர் தனது ஆதரவாளர்களுடன் நள்ளிரவில் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அங்கு இரவு ரோந்துக்கு வந்த காவலர்கள், இரவு நேரத்தில் இப்படி கும்பலாக நிற்கக்கூடாது என அறிவுறுத்தி அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் கோபமடைந்த ஜெகதீசனும் அவரின் அடிப்பொடிகளும் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். ஆளும் கட்சியினர் என்பதால் காவலர்கள் செய்வதறியாது விழித்தனர். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது பரவி வருகிறது. தொடர்ந்து தி.மு.கவினர் செய்து வரும் அராஜகங்களை முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தடுத்து நிறுத்துவாரா?