பா.ஜ.கவினரை மிரட்டிய தி.மு.கவினர்

தென்காசி மாவட்டம் சிவகிரி நகரில் பா.ஜ.க நகர தலைவர் தங்கம் என்பவரை நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில், அவரது கடையில் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, தி.மு.கவை சேர்ந்த நான்கு நபர்கள், தமிழகத்தில் எங்கள் தி.மு.க ஆட்சி வந்துவிட்டது. எனவே பா.ஜ.கவினர் இனிமேல் காவித்துண்டு போட்டு ஊருக்குள் அலையக் கூடாது. மீறி அணிந்தால் அடித்து உதைத்து கொலை செய்வோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.