தி.மு.க நிர்வாகியின் ஆபாச பேச்சு

கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கரூர் மாவட்ட பா. ஜ., மாவட்ட தலைவர் கே.சிவசாமி தலைமையில், பாஜகவினர் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளனர். அதில், திமுக வை சார்ந்த தி.மு.க ஐ.டி. விங் நிர்வாகியான சகாரா கண்ணன், பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் யுவராஜ் என்பவரை அலைபேசியில் அழைத்து ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவரது தாயையும், வீட்டுப் பெண்களையும் கடுமையாக பேசியுள்ளார். தொடர்ந்து பலமுறை இதே போல் கீழ்தரமான செயலில் ஈடுபடும் தி.மு.கவின் சகாரா கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். காவல்துறை சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருகட்டும். தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் இவர்களை போன்ற புல்லுருவிகள் மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?