காங்கிரசில் பிளவு

காலியான கொடிக் கம்பத்தில் சில மாணவர்கள் காவி கொடி ஏற்றியதை குறித்து பேசியதற்காக கே எஸ் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற காங்கிரஸ் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய .  மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர். அசோக், ‘கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கே.பி.சி.சி) தலைவர் டி.கே. சிவக்குமார்,  காங்கிரசின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவின் கருத்தை ஆதரிக்காததால், ஹிஜாப் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் தயாராக இல்லை.  மாணவ மாணவிகள் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தெளிவன முடிவெடுக்க வேண்டும்’ என கூறினார்.