மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம்

திருப்பூர் மாவட்ட சக்ஷம் மற்றும் சேவாபாரதி தொடர்ந்து செய்துவரும் சேவை பணியின் மற்றுமொரு திட்டமாக, ஆட்டிசம் மற்றும் கல்லீரல் பாதிப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச ஹோமியோ சிகிச்சை மருத்துவ முகாம் ஸ்ரீ ஹோமியோ கிளினிக் மருத்துவர்கள் டாக்டர். கார்த்திக் பாபு, டாக்டர். நித்தா ஆகியோர் துணையுடன் திருப்பூர் கிட்ஸ் கிளப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. அஷ்டவர்கர் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், சேவாபாரதி பொறுப்பாளர்கள், கிட்ஸ் கிளப் பள்ளிகளின் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேவைப்படும் அனைவரும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் இந்த முகாமை மாதம் ஒருமுறை என தொடர்ந்து ஒரு வருடத்திற்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.