டிஜிட்டல் கட்டமைப்பு சங்கம்

டெல்லியில் நேற்று நாளை நடைபெற்ற டிஜிட்டல் கட்டமைப்பு வழங்குவோர் சங்கத்தின் வருடாந்தர நிகழ்வு 2022ல் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். மத்திய இணையமைச்சர் தேவு சிங் சௌஹான் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். இந்த ஆண்டுக்கான நிகழ்வுக்கு “5 ஜி மற்றும் அதற்கு பிறகான  விரைவுசக்தியின்  தொலைநோக்கு” என்பது இந்த நிகழ்வின் மையப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது. தொலை தகவல்  தொடர்பு துறையைப் பொறுத்தவரை 2022ம் ஆண்டின் மிகப் பெரிய நிகழ்வாக இது உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கும் அனைவரின் வாழ்க்கைக்கும் 5ஜி’யின் தாக்கம் குறித்து தங்களின் கண்ணோட்டத்தை பகிர்ந்து கொள்ள தனியார் மற்றும் பொதுத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.