வளர்ச்சி பெறும் காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத்தின் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள், முப்படை வீரர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு  பேசிய அவர், “முன்பு, பயங்கரவாதிகளின் மையமாக இருந்த இந்த பகுதி, தற்போது சுற்றுலா மையமாக மாறியுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக முப்தி, அப்துல்லா, அவரது மகன் ஆட்சி செய்தனர். ஆனால், வீடில்லாத ஒரு லட்சம் பேருக்கு வீடு வழங்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், மோடி ஆட்சியில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மோடி மாடல் நிர்வாகத்தால் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. ஆனால், குப்கர் மாடலில் இளைஞர்களின் கைகளில் கற்களும் துப்பாக்கியும் தான் கொடுக்கப்பட்டது. இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவு பெற்ற உடன் காஷ்மீரில் சட்டசபை தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும். கடந்த ஆண்டுகளில் காஷ்மீர் மாநிலம் வளர்ச்சியில் பின் தங்கியிருந்தது. 3 குடும்பத்தினர் மட்டுமே இங்கு பலன்பெற்றுள்ளன. ஆனால், அரசின் திட்டங்கள் மூலம் ஏழைகள் பயன்பெறுவதை மோடி உறுதி செய்துள்ளார். காஷ்மீர் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 3 ஆண்டுகளில் ரூ. 56 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்று பேசினார்.