துணை வேந்தரானார் கர்ணம் மல்லேஸ்வரி

டெல்லி விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக கர்ணம் மல்லேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். பளுதூக்குதல் பிரிவில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கணையான கர்ணம் மல்லேஸ்வரி, தற்போது இந்திய உணவுக் கழகத்தில்(ஏப்.சி.ஐ) தலைமை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். 1994ம் ஆண்டில் அர்ஜுனா விருது, 1999ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, 1999ல் பத்மஸ்ரீ விருது போன்ற மதிப்புமிக்க விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை பூர்வீகமாகக் கொண்ட மல்லேஸ்வரி 1993, 1994ல் உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, 2000ல்சிட்னி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலம் உட்பட பல சர்வதேச பதக்கங்களை வென்றார்.