பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல்

காஷ்மீர் பண்டிட் பத்திரிகையாளர் கௌல் என்பவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் பயங்கரவாத அமைப்பில் இருந்து இரண்டாவது கொலை மிரட்டல் வந்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு, கௌல் மற்றும் பா.ஜ.க எம்பி கௌதம் காம்பீர் ஆகியோருக்கு இதே பயங்கரவாத அமைப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. கௌலுக்கு வந்த 2வது கொலை மிரட்டலில், பதான்கோட் குண்டுவெடிப்புக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். காஷ்மீரில் நடக்கவிருக்கும் தேர்தலில் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை நாங்கள் குறிவைப்போம். நீங்கள் எதுவும் செய்யுங்கள் ஆனால் நீங்கள் எங்கள் ஹிட் லிஸ்டில் உள்ளீர்கள், நீங்கள் டெல்லியில் நீண்ட காலம் ஒளிந்து கொள்ள முடியாது. இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.