பள்ளியில் சரஸ்வதி சிலை சேதம்

கர்நாடகாவில் சமீபத்தில் முஸ்லிம்கள் ஹிஜாப் பிரச்சனையை மீண்டும் எழுப்பி போராட்டம் நடத்தினர். அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்புகூட, சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி சிலைகள் சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டன. ஏற்கனவே, கர்நாடகாவில் உள்ள பள்ளிகளில் சரஸ்வதி பூஜைக்கு தடை விதிக்க வேண்டும் என்று முஸ்லிம் அடிப்படைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.