பண்பை வளர்க்கும் பண்பாட்டு வகுப்பு

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக வட தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 18 முதல் 27 வரை பத்து நாட்கள் பண்பாட்டு வகுப்பு, 326 இடங்களில் உற்சாகமாக நடைபெற்றது. 5,377 மாணவ மாணவிகள் இந்த பண்பாட்டு வகுப்பில் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு, 399 ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். இந்த பண்பாட்டு வகுப்பில் கலந்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கும், வகுப்பு நடத்திய ஆசிரியைகள், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.