குற்றம் நிரூபணம்

கடந்த அக்டோபர் 2020ல் நிகிதா தோமர் என்ற கல்லூரிப் மாணவியை, தௌசீப் மற்றும் ரிஹான் ஆகியோர் பட்டப்பகலில் நடு ரோட்டில் சுட்டுக் கொன்றனர். தௌசீப்,  நுஹ் நகரைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கபீர் அகமதுவின் பேரன் என்பதும் அவரது மாமா குர்ஷித் அஹமது, ஹரியானாவின் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடைபெற்ற விசாரணையில் இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆயுதத்தை வழங்கிய மூன்றாவது குற்றவாளியான அஸ்ருதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். தௌசீப் மற்றும் ரிஹானுக்கு வழங்கப்படும் தண்டணை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன.