விநாயகர் சதுர்த்தி கைவிரித்த நீதிமன்றம்

சென்னையை சேர்ந்த இல.கணபதி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி அளிக்க கோரி இருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மதஉரிமைகளை பின்பற்ற வாழ்வாதார உரிமை முக்கியமானது. பொதுநலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது, அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.