சங்க அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த சங்க ஸ்வயம்சேவர்கள், பல்வேறு தளங்களில் நாட்டின் முன்னேற்றத்திற்காக பல அமைப்புகளை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். உதாரணமாக ஏ.பி.வி.பி, பி.எம்.எஸ், வி.ஹெச்.பி, பா.ஜ.க, சேவாபாரதி, வித்யாபாரதி போன்ற பல்வேறு அமைப்புகள் தேசிய அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளின் தேசிய பொறுப்பாளர்களின் 3 நாள் கூடுதல், ஹைதராபாத்தில் உள்ள பாக்யநகரில் நேற்று காலை துவங்கியது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொது செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே மற்றும் சங்கத்தின் அகில பாரத பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த கூடுதல் வருடம் ஒரு முறை நடைபெறும்.