பிரேசில் அதிபரின் சர்ச்சை பேச்சு

பிரேசிலின் அதிபராக உள்ள ஜெய்ர் போல்சனாரோ, அதிபர் மாளிகையின் முன்பு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ‘விவசாயியாக இருந்தாலும் சரி, விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, துப்பாக்கி வைத்து இருப்பவர்களை யாராலும் அடிமைப்படுத்த முடியாது. பீன்ஸ் வாங்குபவர்கள் துப்பாக்கி வாங்க நினைப்பவர்களை சீண்ட வேண்டாம்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே உலக நாடுகளிடையே துப்பாக்கி கலாச்சாரம் பெருகிவரும் நிலையில், பிரேசில் அதிபரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.