தொடரும் போரட்டம்

கிறிஸ்தவ பள்ளி நிர்வாகத்தின் மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி லாவண்யவிற்கு நீதி கேட்டு போராடிய ஏ.பி.வி.பி மாணவர்களை அராஜகமாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு. இதனையடுத்து லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், தி.மு.க அரசை கண்டித்தும், உடனடியாக ஏ.பி.வி.பி மாணவர்களை விடுவிக்கக்கோரியும், மதமாற்றத்தை தடுக்கக் கோரியும் தேசமெங்கும் ஏ.பி.வி.பி மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். அவ்வகையில் நேற்று கேரளா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், டெல்லி, மீரட், மொராதாபாத், சஹாரன்பூர், காசியாபாத், அசாம், ஹரியானா, ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேசம் என தேசத்தின் பல பகுதிகளிலும் இப்போராட்டங்கள் நடைபெற்றன.