சென்னையில் சதி பயங்கரவாதி கைது

சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் 2 வங்கதேசத்தவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் ஜஹாங்கிர் பிஸ்வாஸ் என்ற வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ஜஹாங்கிர், 8 வருடத்துக்கு முன்பே பாரதம் வந்துள்ளான். சென்னையில் தங்கி இருந்து கட்டுமானத்துறை கான்ட்ராக்டரிடம் வேலை‌ பார்த்துள்ளான். ஹிஜ்ப் உத் தாஹிர் என்ற பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் சென்னையில் உள்ள கோவில்களில் குண்டு வைக்க இவர்கள் திட்டமிட்டது‌ தெரிய வந்தது. காவல்துறையினர் அவனை தேடுவதை அறிந்ததும் சென்னையில் இருந்து தப்பி வங்கதேசத்திற்கு மீண்டும் திரும்பி செல்லவும் நிலைமை சீரான உடன் மீண்டும் திரும்பி வரவும் அவன் திட்டமிட்டிருந்தான். எல்லை பாதுகாப்பு படையினர் சரியான சமயத்தில் எச்சரிக்கப்பட்டதால் அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.