காங்கிரஸ் எம்.எல்.ஏ மருமகள் கைது

கர்நாடகாவின் உல்லாள் தொகுதியின் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., இத்தினப்பா. இவரது மகன் பி.எம்.பாஷாவின் மூத்த மகன் அனாஷ், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததையடுத்து பாஷாவின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 4ல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர். அப்போது பாஷாவின் இளைய மகன் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவர் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து வந்துள்ளார். அவரின் மனைவி மரியம் எனும் தீப்திக்கும் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டதால் மரியம் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக காஷ்மீர் சென்றுள்ளனர். முகமது அமீனுடன் சேர்ந்து சதித்திட்டங்களி தீட்டியதில் மரியம்தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.