பிராமண சமாஜம் கண்டனம்

தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் தலைவர் நா. ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் “காஞ்சி சங்கர மடத்தில் இருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூல் அறுப்பு போராட்டம் தொடர்வோம்” என்று தெரிவித்துள்ளதை வன்மையான கண்டிக்கிறோம். தற்போது பள்ளிகளில் எழுந்துள்ள ஹிஜாப் அணிதல் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் எழுந்தது. தமிழகத்தில் இச்சூழல் இல்லை. இது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்விவகாரம் பள்ளி, மாணவ மாணவிகள், மாநில அரசுடன் தொடர்புடையதே அன்றி எந்த ஒரு தனிப்பட்ட சமூகத்திற்கும் தொடர்புடையது அல்ல. சம்பந்தமே இல்லாமல் பிராமணர்களையும் ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த பூணூல் அணியும் மற்றவர்களையும் தாக்குவோம் என்பதை கண்டிகிறோம். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும், இரு பிரிவுகளுக்கு இடையே விரோத உணர்ச்சிகளை தூண்டுவோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். காஞ்சி சங்கராசார்யருக்கும். சங்கர மடத்திற்கும். பூணூல் அணிவோர்களுக்கும் அவர் தம் நிறுவனங்களுக்கும் போதிய பாதிகாப்பு அளிக்குமாறு தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.