மாரிதாஸ் கைதுக்கு கண்டனம்

தனக்கெதிரான கருத்துகளை உரிய கருத்துகள், விளக்கங்கள் மூலம் எதிர்கொள்ள முடியாத தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனக்கெதிராக பேசுபவர்களை கைது செய்து, வழக்குகள் போட்டு மிரட்டி வருகிறது. அவ்வகையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டவர் மாரிதாஸ். தி.மு.க, காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள், இவர்களுக்கு பின்புலமாக இருப்போர் குறித்து மாரிதாஸ் உரிய ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்தார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க அரசு, மாரிதாசை கைது செய்துள்ளது. மாரிதாஸ் கைதினை கண்டித்து, கருப்பு துணியினால் வாய் மூடி, கருத்து சுதந்திரத்தை நசுக்கி வரும் தி.மு.க ஆட்சிக்கு எதிராக பா,ஜ.கவினர் தமிழகம் முழுவதும் கண்டன போராட்டத்தை நடத்தினர்.