பள்ளிகளில் கட்டாய மதமாற்றம்

பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், கன்னியாகுமரி தவிர வேறு எந்த இடத்திலும் புகார் வரவில்லை’ என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், வழக்கை இன்று ஒத்தி வைத்துள்ளது.