அடோரர்ஸ் காங்கிரிகேஷன் மீது புகார்

உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி, வற்புறுத்தல் போன்றவை மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை சட்டவிரோதமாக மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் பயன்படுத்துகின்றன. அந்த வகையில், ‘பெங்களூருவை சேர்ந்த ‘அடோரர்ஸ் காங்கிரிகேஷன்’ (Adorers Congregation) என்ற அமைப்பு, ஜெர்மனியை சேர்ந்த மிஸ்ஸியோ (Missio), ஸ்பெயினை சேர்ந்த மானோ யூனிதாஸ் (Manos Unidas), கேம்பஸ் க்ருசேட் பார் கிறிஸ்ட் (Campus Crusade for Christ) உள்ளிட்ட வெளிநாட்டு கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்ட் அமைப்புகளிடமிருந்து, வெளிநாட்டு நிதிகளை பெற வகுக்கப்பட்ட எப்.சி.ஆர்.ஏ விதிகள் மற்றும் சட்டங்களை மீறி ரூ. 27.32 கோடியை மதமாற்றங்களுக்காக பெற்றுள்ளது’ என வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ) தெரிவித்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு எழுதி உள்ளதாகவும், இதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எல்.ஆர்.ஓ வலியுறுத்தியுள்ளது.