ஆகம விதி கோயில்களை கண்டறிய குழு

தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறையின் அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்து தமிழகம், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லியை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிபதிகள், ‘தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும். ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். எந்தெந்த கோயில்களில் எந்தெந்த ஆகம விதிகளை பின்பற்றுகின்றன என்பதை கண்டறிய 5 பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தனர்.