பிரதமர் தலைமையிலான குழு

குரு தேக் பகதூரின் 400வது பிறந்த ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு வழிகாட்டவும், கண்காணிக்கவும் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி அதன் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் இணைந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராஜ்நாத் சிங், அமித் ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட 70 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.